வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கம்பகாவை சேர்ந்த மூவருக்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமையால் வைத்தியசாலையும் தொற்றுநீக்கப்பட்டது.
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசியகல்வியற் கல்லூரி கோவிட்-19 தனிமைப்படுத்தல் நிலையமாக அண்மையில் மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் கம்பகா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் குறித்த மையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள 324 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களில் மூன்று பேருக்கு கோரோனோ தொற்று பீடித்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் மூவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர் வெலிக்கந்த கொரோனோ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயில் இன்றையதினம் காலை மூடப்பட்டு, வெளிநோயாளர் பகுதி உட்பட பல்வேறு பகுதிகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருவதுடன், இன்றுகாலை ஊழியர்கள் செல்லும் வாயிலினூடாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா